பெத்த மனம் பித்து.. பிள்ளை மனம் கல்லு..

பக்கத்து அறையில் நோய்வாய்பட்டிருந்த கமலாவின் முனகல் சத்தம் கேட்டது..

"கா... சி.. காசி........"

காசியின் முகத்தில் கவலை ரேகை.. ஆம் கமலாவின் ஒரே மகன் காசி..

சிறு வயது முதல் அவனை கஷ்டபட்டு வளர்த்தவள்.. அவனை நல்ல படிப்பு படிக்க வைத்தவள்..

இப்போது காசி ஒரு தனியார் நிறுவனத்தில் 10,000 சம்பளம் வாங்கும் நல்ல வேளையில் இருந்தான்..

ஆனால் காசிவின் தற்போதைய கவலையின் முக்கிய காரணம்.. தாயின் மீதுள்ள பாசத்தை காட்டிலும் பணத்தின் மீதுள்ள மோகம்...

"அப்பா..... கா.... சி...."

கடந்த வாரம்தான் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.. பல விதமான பரிசோதனைகளை செய்த டாக்டர் எதோ வாயில் நுழையாத வியாதியின் பெயரை கூறினார்.. செலவு மட்டும் கிட்டதட்ட எட்டாயிரம் ரூபாய் ஆகிவிட்டது..

இப்போது கமலா தொடர்ந்து இருமுவதை கேட்ட காசிக்கு மீண்டும் செலவு செய்ய வேண்டுமே என்ற கவலை..

கமலா திரும்ப திரும்ப அவனை அழைத்துப்பார்த்து ஒய்ந்தாள்.. அடுத்த நாள் காலை காசி அருகில் வந்து அவன் தலையை கோதிக்கொண்டே கேட்டாள் கமலா "என்னப்பா காசி.. உடம்புக்கு ஏதும் நோவு வந்துட்டா?.. இராத்திரி முழுக்க உன் அறை விளக்கு எறிஞ்சுகிட்டு இருந்துச்சே.. சரியா தூங்கலையாப்பா?"

காசிக்கு சுர்ர்ர் என்று நெஞ்சில் முள் குத்தியது போலிருந்தது..

Comments

Popular posts from this blog

Wanna live forever????? Follow this dears.....

மகள்..

குறுஞ்செய்தித் தொகுப்பு